சமையலர்-உதவியாளர் ஓய்வு வயது 60-ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு
சத்துணவு மையங் களில் பணிபுரியும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலா ளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ளார். அரசு உத்தரவு வெளியிடப்படும் நாளில் இருந்து முதல்வரின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tamil Education 360 Team.

No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/